Wednesday, May 26, 2010

சோதனை மேல் சோதனை... - 2

சமீபத்தில், இயக்குணர் கௌதம் மேனன் ஒரு தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். தயாநிதி அழகிரியின் படத்தில் அஜித்தை இயக்கப் போவது பற்றி கேட்கும்போது இவ்வாறு கூறியுள்ளார்.

“ I have no news about it, for the last few months I have no contact with Ajith. At the moment my focus is on my Hindi VTV remake.”


அதாவது, தான் அஜித்தின் ஐம்பதாவது படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு சரி, அஜித்துடனோ அல்லது த்யாநிதி அழகிரியுடனோ (தயாரிப்பாளர்), அவருக்கு சில மாதங்களாக தொடர்பே இல்லை என்கிறார். அதுமட்டுமில்லாமல், தனது முழு கவனமும் இப்போது ஹிந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவில் திரும்பிவிட்டது என்று சொல்லி என்னைப் போன்ற பலர் 'தல'யில் பாறையைத் தூக்கிப் போட்டுள்ளார்.

தல, என்ன இது? இதனைக் கேள்விப் பட்டதும், பயங்கர கோபம் எனக்கு. இதற்கு பெயர் தான் அலட்சியம் என்பார்கள். உங்களைப் பொருத்தவரை நடிப்பு வெறும் தொழில் என்றீர்கள். சரி, அது என்னமோ உண்மை தான். ஆனால், உங்கள் தொழிலிலில் ஒரு அக்கறை வேண்டாமா?

என்ன நடக்கப் போகிறது என்று நான் சொல்லவா? எப்படியும் கார் பந்தயம் முடிந்து அக்டோபரில் மீண்டும் சினிமாவிற்கு திரும்பி விடுவீர்கள். அதற்கிடையில், கௌதம் தன் ஹிந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவில் மூழ்கி இருப்பார். ஒன்று உங்களை அவரது படம் முடியும் வரைக் காத்திருக்கச் சொல்வார், இல்லையேல் முடியாது என்று ஒதுங்கிக் கொள்வார். உங்களது 'கால்ஷீட்டை' விரயமடிக்க விரும்பாத தயாரிப்பாளர், வேறு இயக்குணருக்கு மன்றாடுவார். கடைசியில் ஒரு மொக்கை இயக்குணர் சிக்க, நீங்களும் பரிதாபப் பட்டு, ஒத்துக் கொள்வீர்கள். ஏகன், அசல் வரிசையில் இன்னொரு அமர காவியம். இது தானே உங்கள் விருப்பம்?


நீங்கள் கார் பந்தயத்திற்கு போனது எல்லாம் உங்கள் விருப்பம். எனக்கு அதில் துளியும் வருத்தமில்லை. ஆனால், அதே சமயம், உங்கள் 'தொழிலில்' சற்று கவனம் செலுத்த வேண்டாமா? ஏனென்றால், அது தான் நிரந்தரம். நீங்கள் அவ்வப்போது கிடைக்கும் சிறிய ஓய்வுகளில் சென்னை வருக்கிறீர்கள். அந்த சமயங்களில், இயக்குணருடனும் தயாரிப்பாளருடனும் கதை விவாதத்தில் ஈடுபடலாம்; படத்தின் இதற நிலவரங்களைப் பற்றி ஆலோசனை நடத்தி அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்போது தான் உங்கள் நாட்டம், அக்கறை, ஈடுபாடு அவர்களுக்கு புலப்படும். இல்லையேல், அவரவர் தத்தம் வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவார்கள். அதைத் தான் கௌதம் இப்போது செய்கிறர்ர். அவர் மேல் தவறு கூற மாட்டேன். கண்டிப்பாக தவறு உங்கள் மீது தான்...

பி.கு ஒரே ஒரு வேண்டுகோள். கௌதம் மேனன் உங்களது ஐம்பதாவது படத்தை இயக்கவில்லையேல், தயவு செய்து வேறு ஒரு நல்ல கைத்தேர்ந்த இயணரைத் தேர்வு செய்யுங்கள்...

Friday, May 21, 2010

சோதனை மேல் சோதனை... - 1

சமீபத்தில் கார் ரேஸில் கிடைத்த ஓய்வின்போது சென்னை திரும்பினார் அஜித். வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்க நேர்ந்தது. வழக்கமான முட்டாள்தனமான கேள்விகளுக்கு பொருமையாக பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


"மட்டமான படங்களில் நடிக்கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை. அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.

என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக்கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!"
என்றிருக்கிறார்.

தல, இருந்தாலும் நீங்கள் இவ்வளவு அப்பாவியாக இருத்தல் கூடாது. இன்றைய தேதியில் யார் தான் தோல்விப் படங்கள், மட்டமான படங்கள் கொடுக்கவில்லை? யாரும் இந்த விசயத்தில் விதிவிளக்கில்லை. நீங்கள் இப்படி எல்லாம் சாதாரனமாக, வெளிப்படையாக பேசுவது எனக்கு சரியாகப் படவில்லை.

இருப்பினும், நீங்கள் உங்கள் பதிலில் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கோ அல்லது உங்களின் ரசிகர்களுக்கோ அல்லது யோசிக்கும் திறன் உள்ள எவருக்கும் நன்கு புலப்படும். மட்டமான படங்கள் தருவது தவிர்க்கப் பட வேண்டிய விசயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ரசிகர்களின் பணமும் நேரமும் விரயமாவது பற்றி நீங்கள் அக்கறையுடன் பேசும்போது இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நடிகரா என வியந்து போகிறேன். உங்களை சுற்றியுள்ள பிற நடிகர்களைப் பாருங்கள். அவர்கள் இது போன்ற கருத்துக்களை எதேனும் ஒப்பிப்பதுண்டா? தோல்வி படமோ மட்டமான படமோ, சற்றும் பொருட்படுத்தாமல் அடுத்த படத்திற்கு சென்றுவிடுவர். நீங்கள் மட்டும் ஏன் இப்படி?

அதே சமயம், உங்களது இந்த பதிலை பொது மக்கள் வேறு மாதிரி பார்க்கக் கூடும். அதாவது, உங்களுக்கு 'மார்கெட்' போய்விட்டது. படங்கள் சரியாக போகாத பட்சத்தில் தான் மீண்டும் கார் பந்தயங்களுக்கு திரும்பி விட்டீர்கள் என பல கருத்துகள் உங்களைச் சுற்றி வந்த வண்ணம் உள்ளன. அதனால், இது போன்ற சாக்குபோக்குகள் உங்களுக்கு தேவை படுகிறது என எண்ணக் கூடும்.

மேலும், நீங்கள் ஒன்றும் அறுபதாம் வயதில் உள்ளவர் இல்லையே. அந்த வயதில் உள்ளவர்களை சும்மா இருப்பதே மேல் எனலாம். கண்டிப்பாக நீங்கள் அல்ல. நீங்கள் அறுபது வயதைத் தாண்டும் போது அந்த கால கட்டம், சூழ்நிலை கண்டிப்பாக வேறுபட்டிருக்கும். நிறைய புதியவர்கள் வந்துவிடுவார்கள். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், உங்களின் இன்றைய படங்கள் தான் உங்கள் பேரையும் புகழையும் எதிர்காலத்தில் நிர்னயம் செய்யும். சும்மா இருந்தால் என்ன கிடைக்கும்?

அப்படியொன்றும் நடிப்பில் நீங்கள் சலைத்தவர் அல்ல. உங்களுல் ஒரு மாபெறும் நடிகன் இருக்கிறான். அந்த திறமையை வெளியே கொண்டு வாருங்கள். சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் பரவாயில்லை, தாராளமாக பணியாற்றலாம். ஓரளவு வெற்றிக் கனியை ருசித்த மிஷ்கின், வசந்தபாலன், ஜனநாதன் போன்ற இயக்குணர்களுடன் இணையளாம், தப்பே இல்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு நல்ல, சுவாரசியம் மிக்க கதை, திரைக்கதை தரக் கூடிய ஒரு இயக்குணர். அதற்கு முதலில் வழி தேடுங்கள். அதை விடுத்து தயவு செய்து, இது போன்ற கருத்துக்களைக் கூறி என்னைப் போன்ற ரசிகர்களை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்...